'பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து', அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவை காந்தி புரத்தில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிபோராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலத்திற்குள் சென்று மீண்டும் அட்டப்பாடி அருகே தமிழகப்பகுதிக்குள் நுழைகின்றது. இந்நிலையில் கேரள பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இரண்டு இடங்களில் கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்த கோரி கோவை காந்தி புரத்தில் அனைத்துகட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக ,கொங்குநாடு ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள், தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டதின் போது பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பவானி ஆற்று பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும், விவசாய பிரச்சினையும் ஏற்படும் எனவும்  பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அணை கட்டப்படுவதை தடுக்காவிட்டால் வரும் 29ம் தேதி அனைத்து கட்சியினருடன் சென்று அணை கட்டப்படும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அதனை தொடந்து மாணவர்களை திரட்டி கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...