'மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காரணம்', மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவையில் பேட்டி.



ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதுடன், மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான  அவசர சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசகள் ஏன் முன்னதாகவே எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிவர், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மிருகவதை தடை சட்டத்தில் அடிப்படையிலேயே திருத்தம் கொண்டு வந்திருக்கலாம் என்றார். இளைஞர்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு,  சட்டத்திருத்தம் தேவை என்று வலியுறுத்திய அவர், இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தேவை என்றார்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கையை தெரிவிக்க வேண்டும்எ ன்று கேட்டுக்கொண்ட அவர் தடுப்பணை கட்டுவது உண்மை என்ற பட்சத்தில் மாநில அரசின் மக்கள் பிரச்சினைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...