பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி கோவை மாணவர்கள் போராட்டம்

கோவை அருகே ஐல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.

தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...