மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இரும்பறை பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 264 பயனாளிகளுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமில் நடைபெற்றது. இம்முகாமில் அப்பகுதி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய  மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதேபோல், இம்முகாமில் பெறப்பட்டுள்ள 129 மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு ஆணை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, நலிந்தோர் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு நிதியுதவி, 75 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 130 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு இடு பொருட்கள், 9 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என முகாமில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...