கோவையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு


கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு கோவை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். 



பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் மத்தியில் தங்களுடைய ஆதரவினை அளித்து வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காக தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 



கோவை மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி, பறை இசை மற்றும் பல்வேறு கோஷங்களாலும் ஜல்லிக்கட்டிற்கு தடைகோரும் பீட்டா அமைப்பிற்கும், இதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 



மேலும், போராட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகள் போன்றவற்றை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். 



இதனிடையே, மாணவர்கள் சிலர் ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் ஏற்படும் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை தொட்டி இல்லாததால் அதனை மூட்டைகளில் சேகரித்தும் வருகின்றனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...