அ.தி.மு.க கட்சியில் இருந்து விலகும் கோவை மாவட்ட மூத்த நிர்வாகி மலரவன்.


அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகியான மலரவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலரவன், அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்து வருவதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த கட்சி தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற தைரியத்தில் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும், ஜெயலலிதாவையும் நாங்கள் தான் காப்பாற்றினோம் என கூறி வருவதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கம் பிடிக்காததால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சியை ஒரு குடும்பம் காப்பாற்ற முடியாது எனவும், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு சசிகலாவிற்கு இல்லை எனவும் கூறிய அவர், 

அ.தி.மு.க.வில் சூடு சொரணையுள்ள உண்மையான தொண்டர்கள் நீடிக்க முடியாது என தெரிவித்தார்.  ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.விற்கு இருந்த மக்கள் ஆதரவு தற்போது இல்லை எனவும், சசிகலா கூட்டங்களுக்கு மக்களை பணம் கொடுத்து அழைத்து வருவதாகவும் மலரவன் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகி சசிகலா குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல் நபராக கட்சியில் இருந்து விலகியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...