பொறியியல் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கபட்ட கோ-கார்ட் கார் மற்றும் பந்தயம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது


புதிய தலைமுறை பொறியாளர்கள் சமூக அமைப்பு சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கபட்ட 4வது கோ-கார்ட் மற்றும் தகுதி சுற்று பந்தயம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டர் ஸ்பீடுவே மைதானத்தில் நேற்று துவங்கியது.



இதில் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கபட்ட கார்கள் இப்போட்டியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இது குறித்து போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவிக்கும்போது அகில இந்திய அளவில் 169 பல்கலைகழகங்களில் இருந்து விண்ணபங்கள் பெறபட்டதாகவும் இதில் 97 கல்லூரிகள் தனிக்கை செய்யபட்டு கார் வடிவமைப்புக்கு அனுமதி அளிக்கபட்டதாக தெரிவித்தவர்கள் வடிவமைப்புக்கு பின் ஆய்வு மேற்கொள்ளபட்டு 44 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கபட்டதாக தெரிவித்தனர்.

இந்த போட்டியில் பங்கேற்க 44 கல்லூரிகளை சேர்ந்த பல்கலை பொறியாளர்களில் பதிவு செய்யபட்ட நிலையில் 38 பல்கலை கழக பொறியாளர்களுக்கு பிரேக் டெஸ்ட், ஸ்கிப் பேட், ஆக்ஸிலரேஷன் மற்றும் ஆட்டோ கிராஸ் ஆகிய தேர்வில் 28 பேர் இறுதியாக தேர்வு செய்யபட்டு போத்தனூர் செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானதில் இறுதி போட்டிகளில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.



மேலும் இதில் சிறந்த வடிமைப்புகாக ஜிஎன்ஐடி ஹதராபாத் மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். 2வது இடத்தை ஸாண்ட் லாங்வால் பல்கலை மாணவ்ர்கள் பெற்றனர். முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. மேலும் எரிபொருள் சேமிப்பு, சிறந்த டிசைன் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்ட்து.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...