கோவையில் குடிநீர் தேவைக்கு 100 வார்டுக்கும் அவசர தொலைபேசி எண் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் மாநகர பகுதியிலுள்ள பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அவசரம் மற்றும் அவசியத்தை கருதி குடிநீர் தேவைப்பட்டால் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் குடிநீர் வாகனம் மூலம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோயம்புத்தூர் மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் குடிநீர் தேவைப்பட்டால் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல அலுவலக தொடர்பு எண்களான மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2312267, ஜெயன்ராஜ் AE-9442104112, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2551700, சத்தியமூர்த்தி AE-9489206000, ராஜேஸ் AE-9489206016, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2591333, எழில் AE-9442501792, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2243134, சக்திவேல் AE-9489206030, நாசர் AE-9442104104, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2252482, சபரிராஜ் AE-9489206003, கனகராஜ் AE-9442501794, சரவணன் AE-9489206050 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் குடிநீர் விநியோக உதவி பொறியாளர்கள் கைபேசி எண்களை தொடர்பு கொண்டால் குடிநீர் வாகனம் மூலம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் குடிநீர் வாகனம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். 

மேலும், கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டு பகுதிகளுக்கும் தொடர்ந்து நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது சென்று தொடர்ந்து நாள் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த வாகனத்தின் மூலம் நாள் தோறும் மனுக்கள் பெறப்பட்டு வரும்போது அந்த வாகனத்தில் “குடிநீரை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைப்பட்டால் பொது மக்கள் மேற்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டால் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

17.01.2017 செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64,65,66,67,69,75.

18.01.2017 புதன் கிழமை மேற்கு மண்டலம் வார்டுகள் - 5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19, 20,21,22,23,24.

19.01.2017 வியாழன் கிழமை தெற்கு மண்டலம் வார்டுகள் - 76,77,78,79,85,86,87,88,89,90,91,92,93,94,95, 96,97,98,99,100.

20.01.2017 வெள்ளி கிழமை வடக்கு மண்டலம் வார்டுகள் - 1,2,3,4,26,27,28,29,30,31,38,39,40,41, 42,43,44,46,47,55.

23.01.2017 திங்கள் கிழமை மத்திய மண்டலம் வார்டுகள் - 25,45,48,49,50,51,52,53,54,68,70,71,72,73,74, 80,81,82,83,84.

24.01.2017 செவ்வாய் கிழமை கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64, 65,66,67,69,75.

25.01.2017 புதன் கிழமை மேற்கு மண்டலம் வார்டுகள் - 5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19, 20,21,22,23,24.

27.01.2017 வெள்ளி கிழமை வடக்கு மண்டலம் வார்டுகள் - 1,2,3,4,26,27,28,29,30,31,38,39,40,41, 42,43,44,46,47,55.

30.01.2017 திங்கள் கிழமை மத்திய மண்டலம் வார்டுகள் - 25,45,48,49,50,51,52,53,54,68,70,71,72,73,74, 80,81,82,83,84.

31.01.2017 செவ்வாய் கிழமை கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64, 65,66,67,69,75.

மேற்கண்ட நாட்களில் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தின் மூலம் தொடர்ந்து நாள்தோறும் பொதுமக்களிடம் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...