கோவை எட்டிமடை பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தையம்

கோவை எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, தடையை மீறி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டு போட்டிகளான ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை மீதான தடை காரணமாக நாட்டு மாடுகள் அழிய வாய்ப்பிருப்பதாகவும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன் ஐல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரேக்ளா ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். 



இதையடுத்து தடையை மீறி 50 க்கும் ரேக்ளா வண்டிகளில் 4 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது. தடையை மீறி ரேக்ளா ஊர்வலம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...