' பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்' இயக்குனர் தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் ந்டந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்  ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.தற்போது மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் நஞ்சு கலந்த உணவையே உன்னுவதாகவும் இதற்கு காரணம் விவசாய நிலங்கள் அழிக்கபட்டு மனைகளாக உருவாகி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாக பேசியவர் தற்பொழுது 60 சதவீதம் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலை உள்ளதாகவும் ஏவுகனை தயாரிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என செலவு செய்து வரும் அரசு விவசாயதிற்கு 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்க கையேந்தும் நிற்பது தான் தமிழனின் நிலை என்றார்.விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரடு திட்டம் போட்டு பணம் ஒதுக்குகிறது.ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டங்களை செயல் படுத்துவதில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும்  விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன்  தெரிவித்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...