கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டினர்


கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய மற்றும் கலச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மண்பாணையில் புத்தரிசி இட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். 



அப்போது கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். 

மேலும், இந்நிகழ்வின் போது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழர்களின் கலச்சார நடனமான கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று அசத்தியது அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

இதேபோல், கிராமங்களை நினைவூட்டும் வகையில் குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், கிளி ஜோசியமும் அனைவருக்கும் பார்க்கப்பட்டது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...