சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்து பயிர்களுக்கு தகுந்தபடி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குடி நீர் பற்றாகுறை சூழலை பயன்படுத்தி  சிலர் போராட்ட சூழல்களை  ஏற்படுத்துவதாகவும், இதனை தவிர்த்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 140 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், சிறுவாணி அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  கோவை கொண்டு வருவது தொடர்பாக கேரள அதிகாரிகளுடம் தமிழக அதிகாரிகள்  கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வறட்சி தொடர்பாக அறிவிக்க மத்திய அரசு சில விதிமுறைகளை வைத்து இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி  மத்திய அரசிடம் தேவையாக நிதியை  தமிழக அரசு கேட்டுப்பெறும் எனவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொண்டு உதவ முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர்வடிகால் வாரியம், வேளாண்மை துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...