361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இணையதள மூலம் பாடத்திட்ட பயிற்சி துவக்கம்


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இருபெரும் நிறுவனங்களுக்கிடையே ஜனவரி 10ம் தேதியன்று (இன்று) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வேளாண் பல்லைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி மற்றும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் பெ.சாந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.அனந்தகுமார் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சாய்சுமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களான முதுநிலை வணிக மேலாண்மை, முதுநிலை பட்டயப் படிப்பான எரிசக்தி மேலாண்மை மற்றும் சான்றிதழ் பாடங்களான, வீடு மற்றும் மாடித்தோட்டம், மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

வீடு மற்றும் மாடித்தோட்ட விவசாயத்தில் பெருகி வரும் நகர்ப்புற வாசிகளின் ஆர்வத்தின் காரணமாகவும், இளைஞர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இப்புதிய முயற்சிக்கு வித்திட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை இணையதள வழியாக செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்பங்களை 361 டிகிரி மைண்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...