சங்கரா கல்வி நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது


சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பாரம்பரியமானதுமான ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரமானது இந்தியாவில் கால்நடை வளர்ப்போர் உரிமைகளைப் பாதுகாத்தல், வீர விளையாட்டுகளுக்கு ஊக்கம் கொடுத்தல் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இந்த கையெழுத்து பிரச்சாரத்தின் போது சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிறுவன வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்போம், ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் பெருமை, ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைவோம்" ஆகிய வாசகங்கள் எழுதியிருந்த பதாகைகளில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எச்.பரியேஷ், சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள், நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...