பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததைக் கண்டித்து தனியார் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ளது பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தில், உரியடித்தல், சிலம்பாட்டம், மேளதாளத்துடன் கலை நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் மாட்டு வண்டி வளம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்று பொங்கல் வைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இக்கல்லூரி நிர்வாகத்தினரும் கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு திரண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...