பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததைக் கண்டித்து தனியார் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ளது பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தில், உரியடித்தல், சிலம்பாட்டம், மேளதாளத்துடன் கலை நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் மாட்டு வண்டி வளம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்று பொங்கல் வைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இக்கல்லூரி நிர்வாகத்தினரும் கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு திரண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...