தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடப்பதாகவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் காய்ந்த தேய்காய்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர். 

மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...