மகளை மீட்டுத் தரக்கோரி காருண்யா கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை காருண்யா நகரை அடுத்த பச்சினம்பதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பெருமாள். இவரது மகள் மனோ (20). இவர் காருண்யா கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதியன்று சுப்பிரமணிய பெருமாளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஒரு இளைஞர், நான் உனது மகளை கூட்டிச் சென்றுவிட்டதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சுப்பிரமணிய பெருமாள், காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுப்பிரமணிய பெருமாளை தொலைபேசியில் அழைத்தது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமார் மற்றும் மனோ காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் இருவரையும் தேடிவருகின்றனர்.



இதனிடையே, பெண்ணை மீட்டுத்தரக் கோரி அக்கல்லூரி முன்பு பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...