தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி, கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக்க வேண்டும், அரசுப்பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் பணி வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பேரூர் ஆதினம் வளர் தமிழ் இயக்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பேரூர் ஆதின இளையப்பட்டம் மருதாச்சல அடிகாளர், தமிழ் அமைப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையை மாற்றி, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி உயர் நீதிமன்றம், ஆட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...