கோவை தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை உடை அணிந்து கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு, குத்தாட்டத்துடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேலாண்மை கல்லூரி சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி மேலாண்மை கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். 

கல்லூரி வளாகத்தில் அடுப்பு மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்த மாணவ, மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கிராமங்களில் உள்ளதை போன்று கரும்பு ஜூஸ், பஞ்சுமிட்டாய், பதநீர், நொங்கு போன்ற பாரம்பரிய உணவு வகைகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள ஜமாப் வாத்திய இசைக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் ஒன்றாக படிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு கலாச்சாரத்தினை மறந்து வரும் நிலையில் தமிழக கலாச்சாரம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தெரிவதற்காக தமிழ் முறைப்படி பொங்கல் கொண்டாடுவதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். 

பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, கரும்பு கடிக்கும் போட்டி, மண்பாணையில் ஓவியம் வரையும் போட்டி என பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் படித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...