பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான "பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கிளைய்ட்டான் மாநில பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் அவிநந்தன் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் இணையதளம் மற்றும் மின்னணுவின் மூலம் பணபரிவர்த்தனை எவ்வாறு சிறப்பாக செய்வது, இதன் முகியத்துவத்தினை பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எடுத்துரைப்பது குறித்து 85 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியாவில் இருந்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்திருந்தனர். இவையனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.



மேலும், இந்நிகழ்ச்சியில் எலைகா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், மும்பை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கஜேந்திர கோத்தாரி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இக்கருத்தரங்கினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.சுந்தரராமன் கருத்தரங்க அறிக்கையினை வாசித்தார். கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் வரவேற்புரையாற்றினார்.



வணிகவியல் துறைகளின் தலைவர் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல் உள்ளிட்டு பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...