ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் சார்பில் கணினி கருத்துப்பரிமாற்றம், தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம்

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் கணினி கருத்துப்பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம் வியாழனன்று (இன்று) அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இதில் பங்குபெற இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பல நாடுகளில் இருந்து 782 ஆய்வு ஏடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 124 ஆய்வு ஏடுகள் தேர்வு செய்யப்பட்டன.



தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு இணையதளம் எவ்வாறு அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற க்யன்மெட்ரிஸ் நிர்வாக இயக்குநர் ராஜன் பரசுராமன், மிகை யதார்த்தம் பற்றியும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், தொடர்பு திறனும், அதை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் மிகவும் இன்றியமையாதது என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நிலைப் பொருள் அபிவிருத்தி, ஐபிஎம் இந்தியா மென்பொருள் ஆய்வக அமைப்புக் குழுவைச் சேர்ந்த கதிரவன் வேலுசாமி பேசுகையில், மென்பொருள் அலுவலகத்தின் பணியாற்ற நிர்வாக திறன் மற்றுமல்லாமல் சிக்கல் தீர்க்கும் திறன் மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பழக்கவழக்கங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் கருத்தரங்கப் புத்தகம் வெளியிடப்பட்டது. நிரைவாக, தகவல் தொடர்பு துறை தலைவர் பிரகாஷ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை நிரைவு செய்தார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...