பெண்களிடம் தரக்குறைவாக நடந்துவரும் மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தவனை செலுத்த அவகாசம் கேட்ட பெண்களிடம் அவமரியாதையாக பேசிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் பத்து பேர், இருபது பேர் என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதமாதம் தவனை செலுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை முறையாக பணத்தை கட்டிய கடன் பெற்ற பெண்கள் தற்போது உரிய தேதியில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுவதால் உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழல் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதாக கூறி கடன் பெற்ற பெண்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசி வருகிற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பெண்கள் இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...