மருத்துவர்களின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்


கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மகன் உயிரிழந்ததாகவும், இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் பிரதீப் குமார் (20). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள எல்லன் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் செலுத்த வேண்டிய ஊசியியை செவிலியரை செலுத்துமாறு கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டதால் பிரதீப்பிற்கு சிறிது நேரத்தில் உடம்பு தூக்கிவாரி போட்டதாகவும், அப்போது செவிலியர்கள் மருத்துவர்களை அழைத்தும் மருத்துவர்கள் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பிரதீப் என்ன காரணத்தால் அவதிபடுகிறார் என்பது குறித்து மருத்துவர்கள் பரசோதிக்காமல் சென்றுவிட்டதால், சிறிது நேரத்தில் மருத்துவர் ஒரு ஊசி போட்ட பின்னர் பிரதிப்பிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், பிரத்தீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த மருத்துவ அறையில் இருந்த தொலைபேசி, கதவு மற்றும் கண்ணாடியை உடைத்ததுடன் எல்லன் மருத்துவமனையின் நிறுவன மருத்துவர் இராமசந்திரனை தாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்த மருத்துவர்கள் காவலர்கள் உதவியுடன் பிரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே தன் மகன் உயிரிழந்ததாகவும், சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எல்லன் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கையில், பிரதீப் வாந்தி எடுக்கும் போது மூச்சு குழாயில் உணவு துணுக்குகள்  அடைத்து சுயநினைவு இழந்ததாகவும், அதற்காகவே தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதீப்பின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...