ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழர்கள் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். அப்போது, காவிரி பிரச்சனையில் அமைதியாக இருந்தது போல் மத்திய அரசு மவுனம் காக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும், சிங்கத்தை அடக்கக் கூறிய நீதிபதியை, வீடுகளில் சிங்கம் வளர்க்க அனுமதி கொடுத்தால் தாங்கள் சிங்கத்தை அடக்க தயார் எனவும், அனைத்து கிராமங்களிலும் சிங்கத்தை வளர்த்து அடக்கிக் கொள்கிறோம் எனவும் தெரிவித்த அவர்கள் தமிழகர்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பேசும் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...