சூலூர் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில வாலிபர் கைது


கோவை மாவட்டம், சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனியார் நூற்பாலை நடத்திவருகிறார். இவரது நூற்பாலைக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் அப்துல் ஜாபர் (21) என்பவர் இந்து என்ற பெண்ணுடன் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, அப்துல் ஜாபர் அந்த இளம்பெண்ணை தனது னைவி என்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளனர். 

இவர்கள் இருவரும் நூற்பாலையின் அறையில் தங்கியிருந்த நிலையில், திங்களன்று காலை இருவரும் பணிக்கு வராததால் பணியாளர் ஒருவர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். 

அப்போது, இந்து துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி  கொல்லப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட பணியாளர் நூற்பாலையின் உரிமையாளர் செல்வராஜிடம் இந்து பிணமாகக் கிடப்பதை கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அங்கு வந்த சூலூர் காவல் துறையினர் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அப்துல் ஜாபர், இந்து தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக இந்துவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தலைமறைவான அப்துல் ஜாபரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று அப்துல் ஜாபரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளம் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா தேவி (22) என தெரியவந்துள்ளது.

மேலும், சித்ரா தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதும், கணவனை மற்றும் குழந்தைகளை பிரிந்து கோவையில் கடந்த 4 மாதமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அப்துல் ஜாபர் காவல் துறையினரிடம் கூறுகையில், கணவனைப் பிரிந்து தன்னுடன் வாழ்ந்து வந்த சித்ரா தேவி தொடர்ந்து என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார். அதனால் நேற்று இரவு சுமார் 3 மணியளவில் அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி  கொன்று விட்டு தப்பிவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையே, காவல் துறையினர் அப்துல் ஜாபரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...