நொய்யல் நதியை சீரமைக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தின் நீராதாரங்களை பாதுகாக்க கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



மனுவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் நொய்யல் நதியானது. கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையருகே துவங்கி கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக சென்று கரூர் மாவட்டம் நொய்யலில் காவிரியுடன் கலக்கிறது. மழைக்காலங்களில் வெள்ளமாய்ப் பாய்ந்தோடும் நொய்யல், வழியெங்கும் உள்ள குளங்களை நிரப்புகிறது. கோவை மாவட்டத்திற்கு இது முக்கிய நீராதாரமாகும். நொய்யலின் இன்றைய நிலை வேதனைக்குரியது. ஆக்கிரமிப்புகளும், சாக்கடை மற்றும் சாயக்கழிவுகளும் நொய்யலை சிதைத்துவிட்டன. மேலும் கல்கொத்தி மலைப் பகுதியிலிருந்து முண்டந்துறைக்கு கல்வாய்க்கால் வழியே தண்ணீர் வராமல் கேரள அதிகாரிகள் தடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் தடையின்றி வந்துசேர ஓணம்புழா மண் வாய்க்கால் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படாதது. கண்டிக்கத்தக்கதாகும். 

எனவே, கோவை மக்களின் உயிர்ப் பிரச்னையாகிய இதில் உடனடி நடவடிக்கை எடுக்க, நொய்யல் நீராதாரத்தைப் பாதுகாக்க கல்கொத்தி மலை ஓணம்புழா மண்வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நொய்யல் மற்றும் குளம், குட்டை, வாரி போன்ற நீர்நிலைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், மக்களுக்கு பயன்தரக்கூடிய பாரங்களை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் வசந்தகுமார், மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...