அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய அ.தி.மு.க-வினர் கோவையில் ஜெ-தீபா பேரவை துவங்கினர்


அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனிடையே சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென, அக்கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை அமைப்பை துவக்கினர். சசிகலா தலைமையை ஏற்க பிடிக்காததால் அ.தி.மு.க வில் இருந்து விலகி இந்த அமைப்பை துவக்கி இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டுமெனவும் ஜெ-தீபா பேரவையினர் தெரிவித்தனர். 

அ.தி.மு.க வில் சசிகலா மற்றும் தீபா ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருவது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...