ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



அம்மனுவில், கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் கிராமம், பொள்ளாச்சி சாலையில் செயல்படும் டி டி கே பிரஷ்டீஜ் லிட் நிறுவனத்தில் ஊழியர்களான நாங்கள் சுமார் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு ஏற்றாற்போல் ஊழியர்களும் தரமான வகையில் சமையலுக்கு தேவையான குக்கர்களை தயாரித்துக் கொடுப்பதால் அதிக லாபத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், எங்களுக்குரிய பணிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை. ஒசூரில் செயல்படும் எங்களது தலைமை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான பணி மூப்பு பணி அளவுகளை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதம் மட்டுமே எங்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. 

எங்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பலன் இல்லாததால் நாங்கள் பி எம் எஸ் என்னும் மிகப்பெரிய மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்கப்பட்ட பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்துள்ளோம்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கு உரிய ஊதியம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...