ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் கட்டண பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாரதீய போக்குவரத்து ஆட்டோ, டெம்போ, மினிடோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்ட மீட்டர் கட்டணமான குறைந்தளவு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30, அடுத்து வருகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15ம் அரசு வழங்கினால் அந்த கட்டணத்தை அமல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களும், தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளோம்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையில் தமிழக அரசு பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வகையில் இந்த தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீட்டர் கட்டணத்தை நீதிமன்றம் அறிவித்தபடி தொழிற்சங்கத்தை அழைத்து பேசி உடனே கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சென்னைக்கு அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்திய மீட்டர் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தாலும், கோவை மாவட்டத்தில் அதிகமான ஆட்டோக்கள் இருப்பதாலும் ஆட்டோக்களுக்கு வழங்கும் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...