ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தகவல்

ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் கட்சியின் விவகாரம் எனவும் நாளை சசிகலா முதல்வராகவும் முடியும் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி போன்றோர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.



கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை எனவும், தவறு நிதியமைச்சகத்தில் நடந்து இருப்பதாகவும், இதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க-விற்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைமை தேவைப்படுகின்றது. வரும் ஜனவரி 6, 7- ஆம் தேதிகளில் தேசியக் குழு நடக்கும் நிலையில் இதை பரீசிலிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவிற்கு திறமையில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்வதாகவும், சோனியா காந்தி என்ன தகுதிகளுடன் அரசியலுக்கு வந்தார் எனவும் ராகுல் காந்தி பட்டப்படிப்பு படிக்கவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிகட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை எனவும் தனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்து இருப்பதாகவும், ஜல்லிகட்டு விவகாரத்தில் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...