வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்:- "கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் வ.ஊ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. இந்த வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பூங்கா வடிவமைப்பாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பொது மக்களை கவரும் விதத்தில் தரம் உயர்த்தவும், புதுப்பொலிவுடனும் தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பிப்பதற்காக பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ் செயல்திட்ட அறிக்கை பற்றி விளக்கிக் கூறினார். பூங்காவை புதுப்பிப்பதற்கான முதல் தொகுதி செயல் திட்ட அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கை விரைவில் அனுப்பப்படவுள்ளது. மேலும், இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கையில் பூங்கா கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், மத்திய பூங்காவில் அதிகாரகளின் ஒப்புதல் பெற்றப்பின் நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதியுடன் வேலையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வனத்துறை துணை இயக்குநர் மற்றும் கால்நடை அலுவலர் மனோகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பெருமாள்சாமி, பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...