நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

மக்களின் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்றும் அவர் அறிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் காலக்கெடு நேற்றுடன் (டிச. 30) முடிவடைந்தது.

இந்நிலையில், நாளை முதல் (2017 ஜன. 1) ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில வங்கி பயனாளர்கள் 2500 ரூபாய் வரை ஏடிஎம் மையத்தில் நாள் ஒன்றுக்கு எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...