நீலகிரி மாவட்டம் காவல்துறையினர் சாலை விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை விபத்து குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்களை சாலையில் வாகனத்தில் செல்லும் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் வழங்கினார். 



நீலகிரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும், மலை பாதையில் மேல் நோக்கி ஏறும் வாகனங்களுக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள் நிறுத்தி வழி விடவும், குறிப்பிட்ட வேகத்தில் செல்லவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்ட கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, திருப்பும் முன்பு சிக்னல் செய்யவும், இரவில் எதிராக வாகனங்கள் வரும் போது ஒளியை குறைக்கவும், முக்கியமாக சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்கவும், முந்தி செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும், வளைவில்  குறுகிய சாலையில் பாலங்களில் முந்த வேண்டாம், வாகனத்தை இடதுபுறமாக ஓட்டவும் எந்த நேரத்திலும் எதிரே வாகனங்கள் வரலாம், சிக்னல் விளக்குகளை மதித்து இயக்கவும் போக்குவரத்து காவல் துறை சைகைக்கு மதித்து வாகனத்தை இயங்கவும், வாகனத்தில் அனுமதித்த எடைக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம்.

நோயாளிகள் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கு உடனே வழி விடவும், மழைகாலங்களில் வேகத்தை குறைக்கவும், வாகனத்தை நிறுத்தும் முன்பு சிக்னல் செய்யவும்,  மலை பாதை வளைவில் திரும்பும்போது எதிரே ஒரு வாகனம் வருகிறது என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும், இவையெல்லாம் கடைப்பிடித்தால் எந்த ஒரு விபத்தும் இல்லாமல் அனைவரையும் பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...