உணவு பொருட்களை பழைய செய்தி தாள்களில் உபயோகிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்


அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கப்படும் வடை, பஜ்ஜி போன்டா உள்ளிட்ட உணவு பொருட்களை பழைய நாளிதழ்களில் வைத்து பரிமாறுவதோ, பொட்டலம் செய்து கொடுப்பது உடலுக்கு தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகள் உண்பதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். செய்தி தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கும் தரும் வேதிபொருட்களால் ஆனது. மேலும் பழைய செய்திதாள்களில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியதாகும். இது அஜிரணம், குடல் சம்மந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய் சம்மந்தமான பாதிப்புகளை வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் பெரியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

எனவே, அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இதற்கு பதிலாக வாழை இலை போன்ற தீங்கு தராத பொருட்களை கொண்டு உணவு பொருட்களை சுற்றி கொடுக்க வேண்டும் என்றும் பாலிதீன் பொருட்களில் டீ, காபி உணவு போன்ற சூடான பானங்களை பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனவும். மேலும், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கு கால அவகாசம் ஆகஸ்ட் 2016 க்கு பின் நீட்டிக்கப்படவில்லை. எனவே அனைத்து தரப்பினர்களும் உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...