பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை கோட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சார்நிலை பணியமைப்பு விதி 35 (a) புறந்தள்ளிடும் போக்கை கைவிட்டு விதிகளை பின்பற்றி முதுநிலை பட்டியலை வெளியிட்டு பதவி வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

மேலும், விதிமுறைக்கு புறம்பாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயரதிகாரிகளின் வீட்டு பணி மற்றும் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கதினர் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட பணியாளர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி கூறும்போது, கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக முதலமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், முதன்மை இயக்குநர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தவர். 

தங்களை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாநிலக் குழுவிடம் ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...