கோவை கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும், தாய்மார்கள் வேண்டுகோள்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெரும் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட வயதானவர்களும் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அரசிடம் கொடுப்பர்.

தங்கள் மனு மீதான அரசின் நிலைப்பாடுகளை பொறுத்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுவர். இது போன்ற நேரங்களில், தங்கள் மனு உரிய அதிகாரிகளிடம் சென்று, அவர்களிடம் இருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வரும் வரையில் கால்கடுக்க காத்திருப்பர். இதில் கர்பிணிகளும், கைக்குழந்தைகளோடு வரும் பெண்களும் அடங்குவர்.



இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கதறி அழுத தன் கைக்குழந்தைக்கு பாலூட்ட இடம் கிடைக்காமல் அலைந்தார். பின்னர், அவ்வளாகத்தின் வெளியில் இருந்த ஏடிஎம் மையம் அருகில் சென்று அந்த பிள்ளைக்கு பாலூட்டினார். இந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை சற்றே உறுத்தியது.

மனு அளிக்க மட்டுமன்றி பல்வேறு அரசு அலுவல்கள் காரணமாக ஏராளமான தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...