அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக-வால் மட்டுமே நிரப்ப முடியும் என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அ.தி.மு.கவில் ஜெயலலிதாவை போல தகுதி வாய்ந்த தலைவர்கள் யாருமே இல்லை எனவும் அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்

தில்லியில் கொலை செய்யப்பட்ட மருத்துவர் சரவணன் வீட்டிற்கு செல்வதற்காக கோவை வந்த தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் நாராயணபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதும், தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகள் நடப்பதும் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல்  அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தீக்காய சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 

மேலும், சுனாமியால் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி நினைவு தினமான இன்று தமிழக முதல்வரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுவதாக சொல்லப்படும் வாதம் தவறானது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகம் லஞ்ச ஊழலால் புறையோடிக்கிடக்கின்றது. அதை சரி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஏற்பட்டு இருக்கும் அரசியல் வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதாவிற்கு இணையான தகுதி வாய்ந்த தலைவர்கள் அ.தி.மு.க வில் யாரும் இல்லை. அதனால், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி மற்றவர்களை மிரட்டி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியல் பா.ஜ.க-விற்கு இல்லை''. இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...