பலத்த காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கும் கோவை அரசு மருத்துவமனை- உறவினர்கள் குற்றச்சாட்டு


திருப்பூரில் பலத்த காயமடைந்த நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை கொடுக்காமல் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தேவராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஸ் இவரது நான்கு வயது மகளை அவரது பக்கத்து வீட்டு காரரான அப்பாஸ் என்பவர் குடிபோதையில் கடைக்கு கூட்டி செல்வதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலிஸார் அப்பாஸை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த  சிறுமியை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் காலை 7 மணி முதல் சிறுமிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும், காயத்துடன் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

அதே போல் அப்பாஸை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...