டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - பெற்றோர்கள் கோரிக்கை


கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சரவணனின் பெற்றோர் அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மருத்துவ மேல்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார், அங்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்நிலையில் சரவணன் பிரேத பரிசோதனையின் முடிவில் திட்டமிட்டு சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். 

சரவணன் மரணம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சரவணன் கொலையில் டெல்லி காவல்துறையினருக்கு சம்மந்தம் உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...