தமிழக தலைமை செயலர் வீட்டில் சோதனையிட்டதற்கு ஏன் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கேள்வி


தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததற்கு தமிழக முதல்வரும், எதிர்க் கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மம்தா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க -வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசுகையில்,

தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏன் வருமான வரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்கள் தான் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சசிகலா-வை சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு!. இந்த அணுகுமுறை ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல என கூறினார். 

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டதாக கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...