விமான பயணியிடம் ரூ. 53 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்- வருமான வரித்துறையினர் விசாரணை


டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கென்ய இளைஞரிடமிருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்தில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது கென்யா நாட்டை சேர்ந்த கொகுகோ சிஜியோகி சுவெல்டா என்ற பயணியிடம் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உரிய பதிலளிக்காததால் அவரை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவெல்டாவிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ள வருமானத்த்துறையினர் இந்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...