இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் கவரும் வகையில் எம்.ஆர்.எப் "மசஸ்டர்டயர்" அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான  எம்.ஆர்.எப்  ''மசஸ்டர்டயர்'' என்னும் இருசக்கர வாகனத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது. மசஸ்டர்டயர் என்பது இருசக்கர வாகனங்களை சாலையில் நேர்த்தியாக இயக்குவது ஆகும். அதற்கு வாகனத்தின் டயர் மிகவும் கட்சிதமாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மசஸ்டர்டயர் இயக்குவதில் நேர்த்திபெற்றவர்கள் பஙகேற்று  எம்.ஆர்.எப்  டயரின் தொழில்நுட்பம் மற்றும் எவ்வித சாலையிலும் இயக்கத்தகுந்த  எம்.ஆர்.எப்  டயரை சோதனையிட்டனர்.

இவ்விழாவில்  எம்.ஆர்.எப்  லிமிட்டெட் விற்பனை நிர்வாக துணைத் தலைவர் கொஷி வர்கீஸ் பேசியதாவது:-

மக்களுக்கு மசஸ்டர் குறித்து அடிப்படை அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே அதனை சரியான முறையில் இயக்க முடியும். டயரின் திறன், தன்மை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை மசஸ்டர்க்கு மிக முக்கியம். சரியான பாதை, திறன்மிக்க டயர், அனுபவங்கள் இருப்பின் இந்த பயணம் மிக  நன்றாக அமையும். மேலும், இதில் ஈடுபடுபவர் தகுந்த பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும்'' என்றார்.

மசஸ்டர் டயர் இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 150 சிசி மற்றும் அதற்கு மேலே உள்ள திறன்கொண்ட இருசக்கர வாகனத்தில் மட்டுமே இது சரியான முறையில் இயங்கும். இந்த டயர் ஒரு மென்மையான கலவை மற்றும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சாலையினையும் இந்த வகை டயர்கள் எளிதாக கடக்கும். செங்குத்தான வளைவுகளில் செல்லவும் இது சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப் டயர் சோதனைக் குழு மசஸ்டர் டயரினை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர். அப்போது மசஸ்டர் டயர் ஓட்டுநர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் எனவும், பல்வேறு தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மசஸ்டர் டயர் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் பேசினர். தொடர்ந்து, இதன் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...