ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஸ்வச்சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் பல கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில், ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 



மாணவர்களின் மூலமாக ஸ்வச் பாரத் திட்டத்தினை அதிகளவில் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் மாநகராட்சியுடன் மக்கள் ஒத்துழைப்பு தந்து அதிகபட்ச சுகாதாரத்தினை அடைய முடியும். இது ஸ்வச் சர்வேக்ஷன் 2017 விருதினை பெறவும் வழிவக்கும்.

மத்திய நகர்ப்புற  அமைச்சகத்தின் மூலம் ஸ்வச்பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச்சர்வேக்ஷன் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுகதார அளவுகள் மற்றும் அதற்கான உள்ளாட்சி  அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சி இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நகரங்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஸ்வச்சதா செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...