கதவடைப்பு செய்யப்பட்ட நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை சூலூரில் உள்ள தனியார் (டி.டி.எல்) வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் கதவடைப்பு செய்ததை கண்டித்தும், நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் மையத்தை கதவடைப்பு செய்த நிர்வாகம், அதில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர். முன்னறிவிப்பின்றி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கிலோ மீட்டர் தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் காரணமாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான பெண் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடனும், அவர்களுடன் வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினருடனும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...