சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள்

சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது ஆய்வில் உள்ளது என்றும், விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் தகவலறிந்த  அந்த வட்டாரத்தினர் கூறியதாவது:-

"தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்ட் திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழில் துவங்குவோர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்டின் மூலம் ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சென்னை பயோடேக் இன்குபேசன்-க்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி போலவே கையாளப்படும்.

பெண்களுக்கான கோல்டன் ஜீபிலி பய்யோ டெக் பார்க் தமிழக அரசின் உயிரியல் துறையும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து துவங்கப்பட்டது. இந்த 5000 சதுர அடி பரப்பளவில் உள்ள இன்குபேசன் மையம் 2021-ம் ஆண்டுக்குள் 500 தொழில் முனைவோர்களுக்கு அடித்தலமாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே 2 பெண் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்புத்தாண்டில் மேலும் பல தொழில்முனைவோர்களை கண்டறிய உள்ளோம்.

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சகம் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் புதிதாக துவங்கப்படும் நிறுவனம் 1 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும். இதன் மூலம் பெங்களூரைப் போலவே சென்னையிலும் புதிய தொழில் துவங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

இதற்கான மூலதனம் கடனாகவும், முதலீடாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த முதலீட்டில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். மேலும், தொழில் துவங்குவதற்கான முதலீட்டில் 75 சதவிகிதம் கடனாக வழங்கப்படும். இதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட உள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேன்டப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். இந்த திட்டம் மத்திய அரசு அறிவித்த 10 ஆயிரம் கோடிக்கான சிறந்த திட்டமாகும்.

தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் தற்போது மத்திய அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்'' என அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...