பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் சி பி ஐ எம் மனு


பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பின் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத் தேவைக்காக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் மூலம் மாதாந்திர தவணைக் கடன் பெற்றுள்ளனர்.

குறைந்தபட்சம் 9 பேரிலிருந்து 45 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தனிநபர் ஜாமீன் பெற்று 24 தவணையில் கடன் வாங்கியுள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் வரை முறையாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் சிறுசிறு வியாபாரம் மூலம் வருமானம் ஈட்டிவந்த சாமான்ய மக்களின் வருமானம் முடங்கிபோயுள்ளது.

இந்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெறப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்கள் பெண்களை மிகக் கேவலமாக திட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக "பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து பணம் திரும்ப கிடைத்துவிடும். எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...