சாட்டிலைட் டிஷ் மூலம் தமிழகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்பின் ஆனந்த அலை நேரடி ஒளிபரப்பு

சத்குருவால் நேரடியாக தமிழில் நடத்தப்படும் ஈஷா யோகா 2-நாள் வகுப்பு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. முதல் முறையாக சாட்டிலைட் டிஷ் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள 63 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

மேலும், இவ்வகுப்புகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 21 ஆயிரத்து 786 பேர் பங்கேற்றனர். சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு சத்குரு எடுக்கின்ற நேரடி தமிழ் வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் முழுவதும் நேரலை வகுப்பு

சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், முக்கிய இடங்களில் இவ்வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களுக்கு துணை இருந்தனர். இவ்வகுப்பிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் மூலம் மதிய உணவு பரிமாறப்பட்டது. 



ஈரோடு, தர்மபுரி, சேலம், கோபி, ஓசூர், காங்கேயம், கிருஷ்ணகிரி, பெருந்துறை, திருப்பூர், வெள்ளக்கோவில் உட்பட தமிழகத்தின் மேற்கு மாவட்ட நகரங்களில் நடைபெற்ற யோக வகுப்புகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்





இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:-

நான் வழங்கும் இந்த யோக வகுப்பில் தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் உயிர்துடிப்பிற்கு தலைவணங்குகிறேன். சில தலைமுறைகளுக்கு முன் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகசாதனை இருந்தது. அதனை மீண்டும் உருவாக்குவதற்கான நேரமிது. 

36 வருடங்களுக்கு முன் துவங்கிய இந்த தன்னை உணர்தலுக்கான அமைதிப்புரட்சி இனியும் அமைதியாய் இல்லை, கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. பல பேரின் உயிர்களை, இத்தனை சக்தியாய் தொடுவதற்கான ஒரு வாய்ப்பு பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதனை நாம் நிகழச் செய்வோம்" என்றார்.

ஈஷா யோகா சார்பில் சென்னை 10 ஆயிரம் மரக்கன்றுகள்:-

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வகுப்புகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் இலவசமாக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை நட்டு, பாதுகாத்து வளர்க்க அனைவரும் உறுதி எடுத்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...