விபத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்


கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (22). அப்பகுதியிலேயே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று பேரூரில் இருந்து மாதம்பட்டியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இவர்  மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெஞ்சமின் பலியானார். 

இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த பெஞ்சமீனின் மனைவி கவிதா இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 6.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கச்சொல்லி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி ஆணையிட்டார். இதனை செயல்படுத்த அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தவறியதால் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லக்கூடிய 140டி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...