மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சிக்குட்பட்ட மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மற்றும் மக்கும் குப்பைகளை  அந்தந்த நிறுவனங்களே சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத குப்கைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கோவை மாநகராட்சி மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அனைத்து குடியிருப்புகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறக் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் சேகரம் செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் மேற்கண்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், மக்கும் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை 2017 மார்ச் 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். 

மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கோவை மாநகராட்சியை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...